Friday, February 27, 2015

முகமது நபிகளின் உத்தரவை நிறைவேற்றுவோம்.. ஐ.எஸ் செய்த முட்டாள்தனம் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள சிலைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
வடக்கு ஈராக்கின் மோசுல் நகரில் அருங்காட்சியம் ஒன்று உள்ளது.
இதனுள் நுழைந்த, ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் புராதன பொருட்கள் மற்றும் சிலைகளை ஆயுதம் கொண்டு அழித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், பெரிய சிலைகளையும் இடித்து வீழ்த்தி, சுத்தியலால் அவற்றை அடித்து உடைக்கின்றனர்.
கிறிஸ்துவுக்கு முன் 9ம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்கியது குறிப்பிடத்தக்கது.
இவை பொய்ச் சிலைகள் என்றும், முகமது நபி அவற்றை அழிக்க உத்தரவிட்டிருந்தார் என்ற வாசகங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
http://newsonews.com/view.php?22YOlx2bcg80M34edKMMa020BnB4dd2JBn5203ogAO2e4C08O3cbclOye3

No comments:

Post a Comment