Wednesday, February 11, 2015

வெளிச்சத்திற்கு வரும் நித்தி யானந்தாவின் பெட்ரூம் லீலைகள்


நித்யானந்தாவின் படுக்கையறையில் நடிகை ரஞ்சிதா ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ காட்சி மூன்று வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ போலியானது என்றும் மார்பிங் செய்திருக்கிறார்கள் என்றும் நித்யானந்தா கூறி வந்தார். அது ஒருபுறமிருக்க, அவரது அந்த படுக்கையறை லீலைகளை படமாக தயாரித்தார் மதன் பட்டேல் என்கிற கன்னட தயாரிப்பாளர். கன்னடத்தில் இந்தப்படம் "யாருவனு" என்ற பெயரில் ரிலீசானது. அங்கேயே இந்தப்படத்தை நித்யானந்தாவின் ஆதரவாளர்களின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் தான் மதனால் ரிலீஸ் செய்ய முடிந்தது. இப்போது அதே படத்தை தமிழில் "சொர்க்கம் என் கையில்" என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள். மதனே தயாரித்து இயக்கி, நடித்து இசையமைத்திருக்கும் இந்தப்படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்ட நிலையில் நித்யானந்தா கும்பல்கள் வழக்கம் போல மதனுக்கு போன் போட்டு மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சொர்க்கம் என் கையில் படத்தை நீ தமிழ்ல ரிலீஸ் பண்ணக்கூடாது என்கிற மிரட்டல்களோடு "நீ நாசமாப் போயிடுவே" என்று சாபங்களும் விடுகிறார்களாம் நித்தியின் ஆன்மீக அடிமைகள். இந்த மிரட்டல் விவகாரத்தை நான் விடப்போவதில்லை. என்னுடன் போனில் பேசியவர்களின் வாய்ஸை ரெக்கார்டு பண்ணி வெச்சிருக்கேன். அவங்க மேல கமிஷனர் ஆபீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன், அங்க நீதி கெடைக்கலேன்னா கோர்ட்டுக்குப் போவேன், படம் கண்டிப்பா தமிழ்ல ரிலீசாகும் என்று கொந்தளித்த்திருக்கிறார் மதன்.

No comments:

Post a Comment