Wednesday, February 25, 2015

இந்திய சினிமா படங்களில் வருவதுபோல சசி வீரவன்சவுக்கு திடீரென நெஞ்சு வலி !

கைதாகி சிறையில் அடைபட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு , திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாக்களில் அரசியல்வாதிகள் செய்வது போலவே சசி வீரவன்சவும் செய்துள்ளார் என்கிறார்கள். இவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாலம்பே பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சசி வீரவன்ச முன்னர் சிகிச்சை பெற்று வந்தார். சசி வீரவன்சவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய தற்போது உத்தரவிட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
சசி வீரவன்சவிற்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து சிறைச்சாலை பிரதம வைத்திய அதிகாரியின் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்சவிற்கு எதிராக கடுவெல நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சசி வீரவன்ச இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இரண்டு கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அவற்றில் பிறந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2396.html

No comments:

Post a Comment