Wednesday, February 25, 2015

இனரர் நெட்டில் பெண்களின் மண்டையை கழுவி தீவிரவாதியாக்கும் பயங்கர கும்பல் !


இன்ரர் நெட்டை பாவித்து பெண்களோடு தொடர்புகொண்டு பல ஆண்கள் அரட்டை அடிப்பது வழக்கம். ஆனால் இந்த முஸ்லீம் குழு என்ன செய்திருக்கிறது என்றால் , இன்ரர் நெட்டை பாவித்து தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்த்துள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் மறைவான ஒரு இடத்தில் இருந்து பலகாலமாக இந்த வேலை நடந்து வந்துள்ளது. அமெரிக்கா கொடுத்த உளவு தகவலை அடுத்து அதிரடியாக ஒரு வீட்டை சுற்றிவளைத்தார்கள் ஸ்பெயின் நாட்டு பொலிசார். அங்கே உள்ள கணணிகளை பரிசோதனை செய்து பார்த்தால், 4 பேர் அடங்கிய கும்பல் செய்த வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவர்கள் ஸ்பெயின் நாட்டில் இருந்துகொண்டு , உலகில் உள்ள பல பெண்களோடு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள். ஐ.எஸ் அமைப்பில் இணையுமாறு அவர்களுகு ஆசைகாட்டியுள்ளார்கள். இவர்கள் சொல்வதை நம்பி சில பெண்கள் ஏற்கனவே ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைந்தும் உள்ளார்கள். இந்தக் கும்பல் முஸ்லீம் பெண்களையே குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளார்கள். இதுவரை அவர்கள் சுமார் 1,000 முஸ்லீம் பெண்களோடு தொடர்பில் இருந்துள்ளார்கள் என்று ஸ்பெயின் நாட்டுப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதுவரை காலமும் இவர்கள் பிடிபடாமல் எவ்வாறு மறைவாக இருந்து செயல்பட்டு வந்தார்கள் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதுபோக இதனை அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது என்பது தான் பெரியவிடையம் என்கிறார்கள் சிலர்.

No comments:

Post a Comment