Sunday, February 15, 2015

கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டி!



கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கிளிநொச்சி தருமபுரம் இல.1 பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு கடந்த 13ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு பாடசாலையின் அதிபர் சு.சுதாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கண்டாவளை கோட்ட கல்விப்பணிப்பாளர் வீ.இராசகுலசிங்கம் கரைச்சி பிரதேசபை உறுப்பினர் புஸ்பராசா  கௌரவ விருந்தினராகவும், ஓய்வு பெற்ற தருமபுரம் இல.1 பாடசாலையின்  அதிபர் திருமதி.சிவானந்ததேவி வேல்முருகு மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சின்னஞ்சிறார்களின் அழகிய பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் ஆரம்பித்து வண்ணங்கள் நிரம்பிய அணிநடை, இசையும் அசைவுகள் சிறார்கள், உற்சாகம் நிரம்பிய போட்டிகள் பரிசளிப்புகள் என விளையாட்டு போட்டி சிறப்புற நிடைபெற்றது.

No comments:

Post a Comment