இதையடுத்து போலீஸ் குழு ஒன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் அந்த பெண்ணோ கூல்ட்ரிங்ஸ் குடித்தபடியே, போலீசாரை நோக்கி முன்னேறினார். அப்போது குடைமிளகாய் ஸ்பிரேவை பெண்ணை நோக்கி அடித்து திணறச் செய்ய போலீசார் முயன்றனர். அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனிடையே போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் மார்பை நோக்கி சுட்டார். குண்டு பாய்ந்த பெண் அலறி துடித்து கீழே விழுந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கத்தியோடு நின்ற பெண்ணை உயிரோடு பிடிக்க மேற்கொண்டு முயலாமல், நெஞ்சை நோக்கி எப்படி சுடலாம் என்ற கேள்வியை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.
http://www.athirvu.com/newsdetail/2265.html
No comments:
Post a Comment