Sunday, February 8, 2015

மனைவிக்கு 25 கள்ளக் காதலனுக்கு வயது 23: நடந்த கொலையால் கணவன் கைதானார் !



இலங்கையில் கெரகெடியவத்தை பிரதேசத்தில் வேலைக்குச் சென்ற கணவன், அன்றைய தினம் வேலை இல்லை என்பது தெரிந்து உடனடியாக வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவேளை அவருக்கு பெரும் அதிர்சி தான் காத்திருந்தது. தனது மனைவி அயலில் உள்ள 23 வயது இளைஞனோடு கட்டிலில் சல்லாபமாக இருந்துள்ளார். ஆத்திரம் அடைந்த கணவர் , கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்துக்கொண்டு அவரை துரத்த , மனைவி அதனை தடுக்க முனைந்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கீழே வீழ்ந்துவிட்டார்.
தப்பி ஓட வழியில்லாமல் சிக்கிக்கொண்ட அந்த 23 வயது இளைஞரை, கணவன் குத்திக் கொலைசெய்துவிட்டார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் , கணவன் கைதுசெய்யப்பட்டு எல்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யபப்ட்டுள்ளார். அவரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எத்தனையோ பெண்கள் இருக்க, மாற்றான் மனைவி தான் வேண்டும் என்று அலைந்த இந்த இளைஞனின் பரிதாப நிலையை பார்த்தீர்களா.
http://www.athirvu.com/newsdetail/2218.html

No comments:

Post a Comment