Saturday, February 21, 2015

அடேங்கப்பா ! 2 பக்கமும் பேரம் பேசும் ஒரே ஆள் இந்த மின்னல் ரங்காவாக தான் இருக்கமுடியும் போல இருக்கே ?

இந்த படத்தில் உள்ளவர் பிரஜைகள் முன்னணி செயலாளர் நாயகம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஜெயரட்னம் ஆவார். ஸ்ரீ ரங்கா என்பவரை "அதிர்வின்" வாசகர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை என நாம் நினைக்கிறோம். இறுதியாக நாம் வெளியிட்ட செய்தியில் , ரங்கா கன்னத்தில் மின்னியது யார் என்று எழுதி இருந்தோம். அது வேறு யாரும் அல்ல ரியாட் பதியூதீன் தான். மக்களுக்கு நாம் கஷ்டப்பட்டு சேவை செய்ய , நீ மின்னல் நிகழ்சியில் வந்து எம்மை பார்த்து நக்கலடிக்கிறாயா ? இரவு வேளையில் அலரி மாளிகை வந்து மகிந்தவின் புதல்வர்களின் காலில் நீ விழுந்து கிடப்பது எனக்கு தெரியாதா என்ன என்று கேட்டு கேட்டு தான் ரியாட் பதியூதீன் ரங்கா கன்னத்தில் மின்னியுள்ளார். இது எல்லாம் போகட்டும்.
மகிந்தரின் வாரிசுகளோடு அலைந்து திரிந்த இந்த ரங்கா, சில வாரங்களுக்கு முன்னர் மைத்திரியின் மகனோடு திடீரென சினேகிதம் பிரித்துவிட்டார். (புகைப்படத்தை பாருங்கள் மேட்டர் புரியும்) எவ்வாறு இது நடந்தது என்று எவருக்கும் தெரியாது என்கிறார்கள். ரங்கா மகிந்தர் குடும்பத்தோடு எவ்வளவு ஒட்டு என்று அனைவருக்கும் தெரியும். இன் நிலை நீடித்தால் , அரசியலில் தனக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று கருதியே மைத்திரி தனது மகனை லண்டன் அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை ரங்கா தற்போது ஆழும் தரப்பில் உள்ள முக்கிய நபர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவர் யாரும் பேரம் பேசி வருகிறார் என்ற தகவல்களை விரைவில் வெளியிட உள்ளோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
 http://www.athirvu.com/newsdetail/2356.html

No comments:

Post a Comment