Friday, February 6, 2015

1 செக்கனில் எடுத்த முடிவு: உயிர் பிழைத்த குடும்பம் ... விமானம் புறப்பட முன்னர் சத்தம் கேட்டது !

தைவானில் தற்சமயம் நடைபெற்ற விமான விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த ரிரான்ஸ் ஏசியா விமானத்தில் சுமார் 58 பேர் பயணித்துள்ளார்கள். விமானம் கிளம்பு முன்னரே அதன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் இறைக்கை பக்கமாக சத்தம் ஏதோ கேட்ப்பதாக கூறியுள்ளார். இதனால் தான் வலது புறத்தில் உள்ள ஆசனத்தில் அமரவா என்று அவர் கேட்டுள்ளார். இதற்கு விமான பணிப் பெண்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். அவர் உடனே தனது மனைவி மற்று பிள்ளையோடு எழுந்து வலது புறமாக சென்று அமர்ந்துவிட்டார். குறித்த விமானம் பறப்பில் ஈடுபட்டவேளை எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் விமானி அனுபவசாலி என்று கூறப்படுகிறது. ஒருவாறு விமானத்தை கஷ்டப்பட்டு ஓட்டிச் சென்று அருகில் உள்ள ஏரியில் இறக்க முற்பட்டுள்ளார். ஆனால் எந்திரங்கள் இயங்காத காரணத்தால் விமானம் தலை கீழாக சுற்றி, ஏரியில் விழுந்துள்ளது. இதில் குறித்த நபர் அவரது மனைவி மற்றும் குழந்தை உயிர்பிழைத்துள்ளார்கள். இருப்பினும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. விமானம் வந்து ஏரியில் விழும் காட்சியை  வாகனம் ஒன்றில் உள்ள கமரா அப்படியே வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதோ வீடியோ இணைப்பு.


No comments:

Post a Comment