Wednesday, January 7, 2015

வசமாக மாட்டிக்கொண்ட லண்டன் தமிழர்: காம லீலை அம்பலம் !

லண்டனின் வட பகுதியில் வசித்து வந்த 74 வயதுடைய அரவிந்தன் பாலகிருஷ்ணன் மீது பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட 25 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் பலவந்தமாக தடுத்து வைத்தல் மற்றும் அநாகரீகமாக நடந்து கொள்ளல் போன்ற குற்றச்சாட்டுக்களும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டனின் தெற்குப் பகுதியான லம்பெத்தில் வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஒக்டோபர் மாத காலப்பகுதி வரை மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் சிறுவர்களை தொந்தரவு செய்தல், துன்பப்படுத்தல் போன்ற துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளதாக "சதன் கிரவுன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் வரை பிணையில் வெளிவந்துள்ள அரவிந்தன் பாலகிருஷ்ணனின் அடுத்த கட்ட வழக்கு விசாரணை வருகின்ற ஜூலை 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய வழக்கு குறித்து தற்போது மேலதிக தகவல்களை பிரித்தானியப் பொலிசார் வெளியிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1820.html

No comments:

Post a Comment