Sunday, January 11, 2015

சிறுவனுக்கு ஆபாசபடம் காட்டிய இந்திய பாதிரியார் அமெரிக்காவில் கைது !

2,000 அடி : படு பயங்கரமான செங்குத்து மலையில் ஏறி அந்தரத்தில் கூடாரம் அமைக்கும் நபர்கள் இவர்கள் தான் !

[ Jan 11, 2015 05:10:17 PM | வாசித்தோர் : 3505 ]
ஜேர்சன் மற்றும் கட்வெல் என்னும் 2 இளைஞர்கள் செய்யும் செயல் உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது. செங்குத்தாக மற்றும் அதி உயரமான மலை ஒன்றில் இவர்கள் ஏறி வருகிறார்கள். முதலில் 1,000 அடியைக் கடந்த இவர்கள், அங்கேயே இரவைக் கழித்துள்ளார்கள். அதுவும் அந்தரத்தில் தொங்கும் டெண்டு கொட்டகையில். தற்போது இவர்கள் 2,000 அடி உயரத்தில் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்தும் ஏறி வருகிறார்கள். குறித்த மலை 2,800 அடி உயரம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இரவுவேளைகளில் அல்லது ஓய்வெடுக்க வேண்டும் என்றால் அங்கே சம தரைகள் கிடையாது.
அதனால் அந்தரத்தில் தொங்கும் டெண்டு கொட்டாய்களை அமைக்கிறார்கள். 2,000 அடி உயரத்தில் இவர்கள் அதனுள் தான் நிம்மதியாக உறங்குகிறார்கள். ஆட்டம் காணும் கட்டில் ஒன்றில் படுப்பவர் கூட, அது முறிந்துவிடுமோ என்று பயப்பிடுவார்கள். ஆனால் இவர்களுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது என்கிறார்கள். அந்த அளவு உயரத்தில் நிம்மதியாக சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். கரணம் தப்பினால் மரனம். இவர்கள் அமைக்கும் டெண்டு கொட்டாய்கள், கல்லில் அறையப்படும் இருப்பு ஆணியை மற்றும் கயிற்றை நம்பியே உள்ளது.
இதில் எது ஒன்று காலை வாரினாலும் மரணம் தான். சும்மா அல்ல 2,000 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக கல் பாறை மேல் விழுந்தால் என்ன நடக்கும் என்று எவரும் சொல்லத் தேவையில்லை. ஆனால் இதில் ஒரு திரில் இவர்களுக்கு இருக்காம். என்ன திரில்லோ ...
http://www.athirvu.com/newsdetail/1865.html

லண்டனில் நீங்கள் உழைத்து TAX ஆக கட்டும் காசு எங்கே செல்கிறது தெரியுமா ? அதிரவைக்கும் உண்மை !

[ Jan 11, 2015 05:34:31 PM | வாசித்தோர் : 8530 ]
பிரித்தானியாவைப் பொறுத்தவரை பல இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதில் இந்த நாட்டுக்கு வந்து தமது நிலையை உயர்த்திக்கொண்டு சுயமாக வாழ்ந்து வரும் இனங்களாக கருதப்படுவது யூதர்கள், இந்தியர்கள் மற்றும் தமிழர்களே ஆகும். பிரித்தானியாவில் ஒவ்வொருவரும் உழைக்கும் பணத்திற்கு பாரிய TAX இருக்கிறது. அதனை அவர்கள் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசு ரில்லியன் பவுன்டுகளை வருமானமாகப் பெறுகிறது. பின்னர் அதனை அவர்கள், பொதுச் சேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது பிரித்தானியாவில் வந்து குடியேறும், போலந்து ரொமேனியா, சொலவாக்கியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. ஆனால் அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் இவர்கள் எங்கே சென்றாலும் ஒரு மொழிபெயர்பாளரை அழைக்கிறார்கள். அதற்கான செலவினை அரசு தான் ஏற்றுக்கொள்கிறது. சாதாரணமாக இவர்கள் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் கூட இவர்களுக்கு மொழிபெயர்பாளர் ஒருவர் தேவை. இதனால் ஆண்டு ஒன்றிற்கு பிரித்தானிய அரசு, 100 மில்லியன் பவுன்டுகளை செலவு செய்கிறதாம் என்ற அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொழிபெயர்பாளர்கள், தமது சம்பளத்தை தாமே நிர்ணயித்து கொள்கிறார்கள். இதனால் இவர்களின் சம்பளமாக சுமார் 100 மில்லியன் பவுன்டுகளை அரசு செலவு செய்கிறது.
பிரித்தானியாவில் வந்து குடியேறவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும் ஆசை மட்டும் இல்லையென்றால் எப்படி ? பள்ளிக்கு செல்லும் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தை பேசுவார்கள் என்றால் அவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்லலாம். இல்லையென்றால் தமக்கு தெரிந்த ஆங்கிலம் பேசும் நபர் ஒருவரை உதவிக்கு அழைக்கலாம். ஆனால் எடுத்ததிற்கு எல்லாம் மொழிபெயர்பாளர் வேண்டும் என்று அடம்பிடித்தால் நிலை என்ன ஆகும் ? நாம் குளிரிலும் மழையில் காசை உழைத்து அதற்கான வரியைக் கட்ட. அந்த வரிக்காசை எடுத்து பிரித்தானிய அரசு வீண் செலவு செய்வதாக எதிர்கட்சிகள் தற்போது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். இந்த 100 மில்லியன் பவுன்டுகளை பிரித்தானியாவில் உள்ள சிறுவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம். இல்லையென்றால் பள்ளிக்கூடங்களை கட்டலாம் அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/1866.html

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 90000 பவுண்டு பொருட்கள் திருட்டு: பல் செட்டைக்கூட விட்டு வைக்கவில்லை !

[ Jan 10, 2015 08:03:52 AM | வாசித்தோர் : 4295 ]
இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 90000 (86 லட்சம் ரூபாய்) பவுண்டு மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், ஷாம்பெயின் மது வகைகள், பல் செட்டும் கூட திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. லேப்டாப் கேமரா, ஐபாட், டெடி பியர் பொம்மை, வயாகரா மாத்திரைகள், செம்பு குழாய், மின்சார கேபிள்கள் என்று திருடப்பட்ட பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் தொழிலாளர் துறை அமைச்சரின் 18 கியர் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன பைக்கும் சமீபத்தில் இணைந்துள்ளது.
இதுபோன்ற திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களைக் கண்டுபிடிக்க மோசடி எதிர்ப்பு மற்றும் இழப்பு துறை என்று ஒரு புதிய துறை ஒன்று கடந்த வருடம் தொடங்கப்பட்டதாகவும், இதன் மூலம் மோசடி, கையாடல், திருட்டு ஆகியவற்றால் பாதுகாப்புத்துறைக்கு ஏற்படும் இழப்புகள் குறையும், அதேநேரம் ஆயுத படைகளின் செலவு அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ முர்ரிசன் தெரிவித்தார். ஆனால் சென்ற வருடம் 4200 பவுண்டு அளவு மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது. இந்த வருடமோ அது 11500 பவுண்டாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் மட்டும் 7 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள (67 கோடி ரூபாய்) பொருட்கள் திருடு போயிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் அமைச்சகத்துக்குச் சொந்தமான பிரம்மாண்டமான வாஷிங் மெஷின் மற்றும் லாரி திருடு போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வேலை பார்ப்பவர்கள் இந்த திருட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்கிறார்கள். பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் ஆண்டு முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு, மோப்பநாய் சோதனைகள் என பலத்த பாதுகாப்பையும் மீறி இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகாரிகளை மலைக்க வைத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1855.html

சிறுவனுக்கு ஆபாசபடம் காட்டிய இந்திய பாதிரியார் அமெரிக்காவில் கைது !

[ Jan 10, 2015 08:15:06 AM | வாசித்தோர் : 6065 ]
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில், சிறுவனுக்கு ஆபாசபடம் காட்டியதாக இந்திய பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் புனித தாமஸ் அபோஸ்தல் தேவாலயத்தின் பாதிரியாராக இருந்த ஜோஸ் பலிமட்டோம், கடந்த டிசம்பர் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு பாம் கடற்கரையில் உள்ள ஹோலி நேம் ஆப் ஜீசஸ் தேவாலயத்தில் வருகை பாதிரியாராக தனது இறை சேவையை தொடங்கினார்.
47 வயதான அவர், கடந்த ஞாயிறன்று 14 வயதான சிறுவனிடம் தன்னுடைய போனில் இருக்கும் 40 சிறுவர்களின் ஆபாசப்படங்களை நீக்கி தருமாறு கேட்டுள்ளார். தன்னிடமுள்ள ஆபாசப் படங்களை காட்டி சிறுவனுக்கு பாலியல் உந்துதல் ஏற்படுத்திய இச்சம்பவம் வெளியே தெரிய வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு பாம் பீச் கவுண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் அவர் இறை சேவையாற்றும் போது, சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அது தெரிந்த அமெரிக்க தேவாலய தலைமை பாஸ்டர், சிறுவர்களிடம் பழகக் கூடாது என்று இவருக்கு தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1856.html

No comments:

Post a Comment