Sunday, January 11, 2015

இன்ப அதிர்ச்சி கொடுக்க படுக்கை அறைக்குள் வந்த கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவி !

லண்டனில் புதுவருட தினத்தில் வேலை செய்ய கெஞ்சிய டாக்டர்கள்: மணித்தியாலத்திற்கு 80 பவுண்டுகள் சம்பளம் !

[ Jan 10, 2015 06:18:24 AM | வாசித்தோர் : 13560 ]
லண்டனில் உள்ள பல வைத்தியசாலையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், புது வருட தினத்தில் தாம் வேலைசெய்யவேண்டும் என்று கெஞ்சி கூத்தாடியுள்ளார்கள். தமக்கு அன் நாளில் வேலை போடுமாறு உயர் அதிகாரிகளோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். அட புது வருடம் என்றால் வீட்டில் சந்தோஷ்மாக இருப்பதை விடுத்து வேலைசெய்ய வேண்டும் என்று ஏன் இவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணலாம். எல்லாம் காசுக்காக தான். அன்றைய தினம் அரசாங்க விடுமுறை. அதனால் அன்றைய தினம் எவரும் வேலைக்கு வரமாட்டார்கள்.
எனவே வேலைக்கு வரவளைக்க மற்றும் அதனை ஊக்குவிக்கவே அரசாங்கம் அன்றைய தினம் வேலை செய்பவர்களுக்கு மணித்தியாலத்திற்கு £80 பவுன்டுகளை தருவதாக கூறியிருந்தது. என்ன ஆச்சரியம் பல மருத்துவர்கள் நான்… நீ என்று முந்தியடித்து மருத்துவமனைக்குச் சென்று வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு 10 மணித்தியாலம் வேலை செய்தாலே 1 வார சம்பளம் கிடைத்துவிடும் அல்லவா. ஆனால் இதுவரை வைத்திய சாலையில் அவசர சேவைப் பிரிவில்(A&E) , எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.. ஒரு அவசரம் என்று மருத்துவமனை சென்றால், இனி நீங்கள் திரும்பி வரக்கூடாது என்பது போல உணர்த்தி அனுப்புகிறார்கள் மருத்துவர்கள். ஆம் சுமார் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இன்றும் காணப்படுகிறது..
இதனால் நோயாளிகள் பொறுமையை இழந்து இறுதியாக அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார்கள். நாளை தமது ஏரியாவில் உள்ள GP இடமே காட்டிக்கொள்ளலாம் என்று நினைக்க தோணும் அளவு வைத்தியசாலைகளில் காத்திருக்கும் நேரம் இருக்கிறது. நோயாளிகளை உடனுக்கு உடன் பார்பதில் மருத்துவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரியவில்லை. அதுவும் இரவில் திடீரென சுகயீனம் ஏற்பட்டு அதனை காட்ட மருத்துவமனை சென்றால், மறு நாள் காலைவரை அங்கே காத்திருக்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆசிய நாடுகளில் கூட இப்படி காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் லண்டன் போன்ற முன்னேறிய நாடுகளில் இதுபோன்ற நிலை காணப்படுவது வெட்கத்துக்குரிய விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1852.html

ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து "அதிர்வலைகள்" உணரப்பட்டது என்கிறார்கள்

[ Jan 10, 2015 07:57:28 AM | வாசித்தோர் : 10020 ]
கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து அதிர்வலைகள்(சிக்னல்) உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ’ஏர் ஏசியா’ விமானம், ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்த தேடுதல் வேட்டையில் சமீபத்தில் விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்புப் பெட்டியும் இருக்கும் என்பதால் அதில் கருப்பு பெட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு அதில் கருப்பு பெட்டி காணப்பட வில்லை. எனினும் வால்பகுதி கிடைத்த இடத்தில் தான் கறுப்பு பெட்டியும் இருக்கக்கூடும் என யூகிக்கப்பட்டது. எனவே, ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் கருவியை வைத்து இந்தோனேஷிய மீட்பு குழுவினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்பு பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டுள்ளதாக தேடுதல் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்தார். நீர்மூழ்கி வீரர்கள் அதிர்வலைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளதாக இந்தோனேஷிய ஆயுதப் படைகளின் தளபதி ஜென் மொல்டோகோ தெரிவித்தார். விமானத்தின் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகி இருக்கும் முக்கிய பாகமான கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெரிய வரும். கருப்பு பெட்டியின் ஆயுள் காலம் 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1854.html

இன்ப அதிர்ச்சி கொடுக்க படுக்கை அறைக்குள் வந்த கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவி !

[ Jan 11, 2015 07:45:16 AM | வாசித்தோர் : 15405 ]
அமெரிக்க கரோலைன் மாநிலத்தில் வசித்து வந்த சீசா என்னும் 28 வயது ராணுவ வீரரை, அவரது மனைவியே நெஞ்சில் சுட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளியன்று காலை இடம்பெற்றுள்ளது. காலை 8.00 மணிக்கு எழுந்து ராணுவ முகாமுக்கு சீசா சென்றுவிட்டார். ஆனால் எதிர்பாராத வகையில், அவர் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். விட்டின் முன் கதவு வழியாக உள்ளே நுளைந்த அவர், எர்லாமை அணைக்க மறந்தும் விட்டார். படுக்கை அறையில் உறங்கிக்கொண்டு இருந்த அவரது மனைவி அந்த சத்தத்தை கேட்டு எழுந்துள்ளார். வீட்டினுள் கள்வன் புகுந்துவிட்டதாக எண்ணியுள்ளார். இதேவேளை சீசா நேரடியாக சமையல் அறைக்குச் சென்று தனது மனைவிக்கு காலை உணவை தயாரித்துவிட்டு அதனை கொண்டு சென்று இன்ப அதிர்சி கொடுக்கலாம் என்று நினைத்துள்ளார்.
கையில் உணவுத் தட்டை ஏந்திய வண்ணம், சீசா படுக்கை அறை கதவை திறக்க முற்பட்டவேளை அவரது மனைவி ரிவ்னி(27) படுக்கை அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து கதவை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டு கதவை துளைத்துக்கொண்டு வெளியேறி அவர் நெஞ்சில் பாய்ந்துள்ளது. அந்தவேளைஅவர் தனது மனைவியின் பெயரை கத்திக்கொண்டு நிலத்தில் சாய்ந்துவிட்டார். அப்போது தான் மனைவிக்கே தெரியும், தான் தனது கணவரை சுட்டுவிட்டேன் என்று. உடனடியாக அவர் அம்பூலன்ஸ் சேவைக்கு அழைப்பை விடுத்து, அவர்கள் வரும்வரை முதலுதவியைச் செய்துகொண்டு இருந்துள்ளார். நல்லவேளையாக துப்பாக்கிக் குண்டு, நடு நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதனால் அவரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படவில்லை.
சீசா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர், இவர்கள் வசித்து வரும் பகுதியில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என்றும். இதன் காரணமாகவே தனது வீட்டில் கள்வன் புகுந்து விட்டான் என்று தான் நினைத்துவிட்டதாகவும் மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். பொலிசார் ரிவ்னியை குற்றவாளியாக கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1862.html

No comments:

Post a Comment