Thursday, January 29, 2015

நான் தீவிரவாதிகளுடன் வாழ்கிறேன்: 8 வயது சிறுவன் பேச்சு!

பிரான்சில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக 8 வயது சிறுவன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து பாரிசின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து நைஸ் நகரைச் சேர்ந்த பள்ளியில் ஒரு நிமிட மவுன பிராத்தனை அனுசரிக்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்திய ஆசிரியையிடமும் வழக்கத்துக்கு மாறான விதத்தில் பேசி, தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை 8 வயது சிறுவன் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் போக்கு குறித்து, கண்காணித்து கூறுமாறு பொலிசாரிடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் ஆசிரியை கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர்களுக்கு ஆதரவாகவே அச்சிறுவன் பேசினார் என்றும் விளக்கம் அளித்த நிலையிலும் அவர் தனது கருத்திலிருந்து மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்யாத நைஸ் நகர பொலிசார், சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்பின் சிறுவனிடம் விசாரித்த பொலிசார், தீவிரவாதிகளுக்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கிறாய்? என்று கேட்டனர்.
அதற்கு அந்தச் சிறுவன், “நான் தீவிரவாதிகளுடன்தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் என்றால் யார்? என்று கேட்டதற்கு, தெரியாது என்று கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவனின் பேச்சால் விசாரணை நடத்திய பொலிசாரும் பள்ளி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளிக்க பொலிசார் ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பிரான்ஸின் அமைப்பு ஒன்று அளித்துள்ள அறிக்கையில், சிறுவனும் அவனது பெற்றோரும் ஜனவரி முதல் வாரத்தில் நடந்த சம்பவங்களால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவை அனைத்தும் சிறுவனின் ஆழ் மனதில் நிலைத்துள்ளது. இது தான் சிறுவனது பேச்சுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment