என்னே ஒரு மனிதாபிமானம் கனடாவில்!
கனடா ஸ்காபுரோவில் TTC பேரூந்தினால் வெள்ளிக்கிழமை மோதப்பட்டதில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தைப் பார்த்திருக்கக் கூடியவர்கள் இன்னமும் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என ரொறன்றோ காவல்துறை அறிவித்துள்ளது.
பிஞ்ச் அவெனியு ஈஸ்ட் மற்றும் நெல்சன் சந்திப்பு வளைவில் 14 வயது அமிரியா டில்ஜோன்ஸ் TTC பேரூந்தினால் மோதப்பட்டார்.
அவர் படித்த பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் நேற்றைய தினம் அவரை நினைவு கூர்ந்தனர்.
சிறுமியை மோதிய பின்னர் TTC நிற்காமல் சென்று விட்டது. எனினும் மறுநாள் சனிக்கிழமை பேரூந்தைச் செலுத்திய 27 வயது சாரதி காவல்துறையிடம் சரணடைந்தார்.காவல்துறையினர் அவரை விசாரணை செய்த போதிலும் எவ்வித குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை.
TTCயின் தலைவர் அன்டி பைஃபோர்ட் சாரதி பணியில் தொடர்கிறாரா என்ற ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.எனினும் TTC சபையின் பேருந்து ஓட்டுனர்களுக்கான பயிற்சி தொடர்பாக முழுமையான மீளாய்வு மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டார்.
amaria-diljohn 2
amaria-diljohn 3
amaria-diljohn1
http://www.canadamirror.com/canada/35736.html