இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர் கட்சியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என்று நாளை(30) அறிவிக்க உள்ளதாக அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவில் அங்கம் வகிக்கும், ஒருவர் ஊடாக இச்செய்தி உத்தியோக பூர்வமற்ற முறையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கில் உள்ள தமிழர்கள் மைத்திரிக்கே வாக்களிக்க வேண்டும் என்று TNA கோரவுள்ளதாக அறியப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் நாளை அவர்கள் இதனை உத்தியோக பூர்வமான அறிவிக்கும் வரை எதனையும் உறுதியாக கூறமுடியாது.
ஏன் எனில் இறுதி நேரங்களில் பல்டி அடிப்பதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல சம்பந்தன் ஐயா மகிந்தரை எதிர்க்க அவ்வளவு சுலபத்தில் ஒத்துக்கொண்டு விடுவாரா என்ன ?
http://www.athirvu.com/newsdetail/1743.html
No comments:
Post a Comment