Friday, December 19, 2014

நான் உங்களைப் போல் வர விரும்புகின்றேன்! கொழும்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்த சிறுவன்

நான் உங்களைப் போல் வர விரும்புகின்றேன் என்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் சிறுவன் ஒருவன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளான். 
சில தினங்களுக்கு முன்னர் மத்திய கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
அதில் பலாமரச் சந்தியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி வாழ்க என்று வாழ்த்திக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டு தனக்கு அருகில் அழைத்து பேசியுள்ளார்.
ஜனாதிபதி -  மகனின் பெயர் என்ன?
சிறுவன் -   தினுஷ லக்ஷான்
ஜனாதிபதி - மகனே பாடசாலை செல்கின்றீர்களா? எங்கு இருக்கின்றீர்கள்?
சிறுவன் -  எனக்கு பாடசாலை செல்ல சற்று சோம்பேறியாகவுள்ளது. கிராண்ட்பாஸ் பகுதியில் வீடு உள்ளது
ஜனாதிபதி -  அப்படி முடியாது. நன்றாக படிக்க வேண்டும். மகனே பெரியவராக வந்ததும் யார் போன்று வர விருப்பம்
சிறுவன் - உங்களைப் போன்று வர விரும்புகின்றேன்.
ஜனாதிபதி -  என்னைப் போன்று வரவேண்டுமாயின் நன்றாக படிக்க வேண்டும். நன்றாக படிப்பீர்களா?
சிறுவன் .  ஆம். என பதிலளித்துள்ளான்.

No comments:

Post a Comment