Friday, December 19, 2014

லண்டன் ஹரோவில் கார் பார்க்செய்யும் இடத்திற்காக தகறாறு: பெண்ணை கத்தியால் குத்திய நபர் !

லண்டன் ஹரோவில் உள்ள Rayners Lane வீதியில் நேற்றுக்காலை, கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மெற்றோ பாலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காரை பார்க் செய்யும் இடத்திற்காக 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணும், அவரது பக்கத்து வீட்டு ஆண் ஒருவரும் அடிக்கடி தகறாறில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அயலவர்கள் கருத்துப்படி இச்சண்டை சுமார் 2 வருடங்களாக நீடித்துள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை பார்க் செய்வதற்காக அடிக்கடி வாச்சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இன் நிலையில் நேற்றுக்(18) காலை 7.30 மணியளவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. அயலவர்கள் வெளியே ஓடிப்போய் பார்த்துள்ளார்கள்.
அங்கே கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில், குறித்த பெண் ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளார். கறுப்பு ஜாக்கெட் அணிந்த ஒரு நபர் அங்கிருந்து ஓடிச் சென்று மறைவான இடத்தில் நின்ற ஒரு காரில் ஏறிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்தேக நபர் தற்போது கைதாகியுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:

Post a Comment