Tuesday, December 30, 2014

மகனை நாய் கடித்து விட்டது: சினிமா பாணியில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற அப்பா !

CCTV கமராவில் பதிவாகியுள்ள ஒரு காட்சி அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு அப்பா தனது செல்லப்பிராணியான நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். அவரது கார் ஒரு சிக்னல் லைட்டில் நிற்கும்வேளை பார்த்து அருகில் நின்ற மனிதாபிமானம் உள்ளவர்கள், நாயின் கழுத்தில் உள்ள கயிற்றை அவிழ்த்து அதனை காப்பாற்றியுள்ளார்கள். சினிமா படங்களில் தான் வில்லன், ஹீரோவை இப்படி காரில் அல்லது குதிரையில் கட்டி இழுத்துச் சென்று கொடுமை படுத்துவார்.
நாயின் ஒரு கால் உடைந்து, மேலும் அது படுகாயம் அடைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிசார் குறித்த நபரை அணுகி ஏன் இவ்வாறு நடந்துகொண்டீர்கள் ? என்று கேட்டபோது, தனது நாய் தன் மகனை கடித்துவிட்டது என்றும் சரியான பாடம் புகட்டவே தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் மகன் உடலில் எந்த ஒரு நாய் கடிக்கான அறிகுறிகளும் இல்லை. இதனால் பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள். இதேவேளை அயலவர்கள் திரண்டு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். குறித்த நபர் சில வாரங்களுக்கு முன்னர், ஒரு பூனைக் குட்டியை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார் என்றும், மேலும் இந்த நாயை கொடுமைப் படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்கள். குறித்த நாயின் பெயர் “பக்கோ” என்றும், அதற்கு தாமே உணவு கொடுத்து வருவதாகவும் அயலவர்கள் கூறியுள்ளார்கள். நாயை மட்டும் வைத்திருக்கும் இந்த மனிதர் அதற்கு ஒரு நாளும் உணவு கொடுப்பது இல்லை என்றும் அயலவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளார்கள்.
இதனால் இன் நபர் தற்போது பொலிசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் என்று அறியப்படுகிறது. பிரித்தானிய பொலிசார் என்ன சும்மா விட்டுவிடுவார்களா என்ன் ? ஒரு காட்டுக் காட்டி தான் ஓயும் போல இருக்கே !

http://www.athirvu.com/newsdetail/1756.html

No comments:

Post a Comment