காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள அவரது வீட்டை இன்று முற்றுகையிட போவதாக தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அறிவித்தார்.
இதையடுத்து பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை லீத்கேசில் வடக்கு தெருவில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, மாநில செயலாளர் ரமணி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மயிலை அசோக், பொதுக்குழு உறுப்பினர் ரவிராஜ், எம்.ஆர்.ஏழுமலை, அசோகன், மணிபால், சூளை ராஜேந்திரன், தணிகாசலம், தமிழ்வாணன், ஏழுமலை, அகரம் கோபி, பாலமுருகன் உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கொடியுடன் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் ரவிசேகரன் மற்றும் பொலிசார் அங்கு சென்று, திரண்டு நின்ற காங்கிரஸ் கட்சியினரை கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனால் பொலிசாரும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் குஷ்பு வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி மொத்தமாக நின்றனர்.
இதற்கிடையே மதியம் 12.30 மணி அளவில் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, போராட்டம் நடந்த போது வீட்டில் குஷ்பு இல்லை.
http://www.newindianews.com/view.php?2eAAlvcb2UI0Ce424OMoc22a4mN23d4RDKc00a66AYde3AC4c0c233OYd3 |
No comments:
Post a Comment