Thursday, December 18, 2014

கண்டியில் குடும்பப் பெண் பலாத்காரத்தில் மாணவர்கள்…

வீட்டில் தனிமையிலிருந்த 35 வயது நிரம்பிய குடும்பப் பெண் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கண்டி நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

மேற்படி விசாரணைகளை பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சந்தேக நபர்களான பாடசாலை மாணவர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்றும் பணித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் ,
கண்டி பூவேலிக்கடை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், பகல் வேளையில் அத்து மீறி வீட்டினுள் பிரவேசித்த 17 வயது, 18 வயது மாணவர்கள் இருவர் அப் பெண் மீது பலவந்தமாக பாலியல் சேஷ்டை புரிய முற்பட்டுள்ளனர். பாடசாலை சீருடையுடன் வந்ததாகக் கூறப்படும் இம்மாணவர்கள் குறித்து அப்பெண் கண்டி பொலிஸ் நிலைய பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட இரு மாணவர்களையும் கைது செய்து நேற்று கண்டி நீதிமன்ற நீதிவான் ஏ. எம். டி. வசந்தகுமார முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
நீதிவான் இரு மாணவர்களையும் சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்துடன் மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment