வன்கூவரில் கிறிஸ்மஸ் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 இளைஞர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இரு உணவு விடுதிகளினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக வன்கூவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சம்பவமாக Hot Delivery உணவு விடுதியினுள் ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர்கள் இருவர் அங்கிருந்த பொருட்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரண்டாவது சம்பவம் Truong Thanh Vietnamese உணவு விடுதியினுள் புகுந்த மற்றைய இருவரும் ஆயுதங்களை காட்டி அங்கிருந்த வாடிக்கையாளர்களை அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்து சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் 17 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.