Thursday, December 25, 2014

நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற நத்தார் தின ஆராதனைகள்!



உலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு புளியந்தீவு அன்னை மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் நடைபெற்றன.
இதன்போது நாட்டில் நீடித்த அமைதியும் சாந்தியும் ஏற்பட வேண்டும் என சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பெருமளவான அடியார்கள் கலந்து கொண்டனர்.
ஹற்றனில் நடைபெற்ற நத்தார் தின ஆராதனை
மலையக கிறிஸ்தவ மக்கள் நத்தார் தின பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடுகின்றார்கள்.
மலையகத்தில் பிரதான திருச்சபையான ஹட்டன் ஒலி கிரோஸ் தேவாலயத்தின் அருட்தந்தை கே.எல். லெஸ்லிபெரேரா தலைமையில் சமய வழிபாட்டுகளுடன் நத்தார் பண்டிகை ஆரம்பிக்கப்பட்டது.
நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மலையகத்திற்கு வருகை தரும் மக்களுக்கு விசேட போக்குவரத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment