இவர்கள் இருவரும் சவுத்ஹாம்டனில் மாநகரில் உள்ள ஒரு ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று பதிவுத்திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்கள். இத்திருமணத்திற்கு 2 விருந்தினர் மட்டுமே சென்றும் உள்ளார்கள். இதனை ஏற்கனவே பார்த்து சந்தேகம் கொண்ட ரெஜிஸ்டர் ஆபீசர் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியவேளை பார்த்து பிறிதொரு விடையமும் நடந்துள்ளது. திருமண பதிவுப் புத்தகத்தில் தனது மனைவியின் பெயரை பச்சைப் பிழையாக எழுதியுள்ளார், பாபர் கான். உங்கள் இருவருக்கும் எத்தனை நாள் பழக்கம் என்று ஆபீசர் கேட்க்க பல மாதங்களாக தெரியும் என்று அவர் பதில் கூறியுள்ளார். மேலும் சந்தேகம் கொண்ட ஆபீசர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வந்த பொலிசார் அவர்களை உடனே கைதுசெய்து, வீட்டை சோதனையிட்டவேளை ஆபீசர் கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்று 2 பேருமே தமது வீட்டில் பேப்பர் ஒன்றில் ஏற்கனவே எழுதி மனப் பாடம் செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மணமகனுக்கு 20 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மணமகளுக்கு என்ன தண்டனை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1686.html
No comments:
Post a Comment