Thursday, December 18, 2014

நீ என்னை அழிக்கவா பார்க்கிறாய் ? கெட்ட வார்த்தையால் திட்டிய மகிந்த !

லண்டனில் திக் திக் நிமிடங்கள்: ஓடும் பிளேனை நிறுத்திய பொலிசார் !

[ Dec 18, 2014 06:17:12 AM | வாசித்தோர் : 18335 ]
நேற்றைய தினம் லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில், ஓடுபாதையில் பறக்க தயாராகி, ஓடிக்கொண்டு இருந்த விமானத்தை நிறுத்தி அதில் உள்ள 15 வயதுப் பெண்ணை மீட்டுள்ளார்கள் பொலிசார். அப்படி என்ன தான் நடந்தது ? வாருங்கள் விடையத்திற்குச் செல்லலாம் !
லண்டனில் உள்ள ஒரு முஸ்லீம் பெற்றோர் தமது 15 வயது மகளைக் காணவில்லை என்றும் அவர் வீடு திரும்பவில்லை என்றும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். காதலனுடன் ஓடி இருக்கலாம், இல்லையென்றால் எவராவது பிடித்துச் சென்றிருக்கலாம். அதற்கு மேல் யாராவது கடத்திச் சென்று கற்பழித்துவிட்டு கொன்றும் இருக்கலாம். இப்படி எல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்த விடையத்தை டீல் பண்ணியது பிரித்தானியாவின் சாதாரண பொலிஸ் அல்ல. ஸ்காட்லன் யாட் பொலிசார். அவர்கள் உடனடியாகவே இச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரது கம்பியூட்டரை ஹக் செய்து அவர் யாரோடு எல்லாம் தொடர்பில் இருந்துள்ளார் என்று பார்த்துள்ளார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு கிடைத்த தகவல் அதிர்சியை தந்தது. இந்த 15 வயது சிறுமி ISIS தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த விடையம் இவரது பெற்றோருக்கு அறவே தெரியாது. அதிலும் வேதனையான விடையம் என்னவென்றால் எங்கோ கண் காணாத தேசத்தில் உள்ள தீவிரவாதி ஒருவரை இச்சிறுமி காதலித்தும் உள்ளார். பல மாதங்களாக சிறுகச் சிறுக பணத்தை சேர்த்து ஒருவாறாக, சிரியா செல்ல, துருக்கிக்கு விமான டிக்கெட்டை புக் செய்து உள்ளார். லண்டனில் இருந்து துருக்கி சென்று அங்கிருந்து எல்லை வழியாக, சிரியாவுக்குள் சென்று தனது காதலனுடன் ஒன்றுசேர்வதே இந்தச் சிறுமியின் திட்டம். லண்டனில் இருந்து துருக்கி சென்றுவிடலாம். ஆனால் அங்கிருந்து எல்லை சென்று, பின்னர் சிரியா செல்வது என்பது மரண எல்லையைக் கடக்கும் பயணம் ஆகும். இவர் ஹீத்றோ விமான நிலையம் சென்று , செக் அப் எல்லாம் செய்து முடித்து இறுதியாக விமானத்திலும் ஏறிவிட்டார்.
இதற்கிடையே ஸ்காட்லன் யாட் பொலிசார் சம்பவ தினத்தன்று துருக்கிக்கு பயணமாகிய விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளின் பெயர்களையும் சோதனை செய்துகொண்டு இருக்கிறார்கள். இறுதியாக சற்று நேரத்தில் புறப்பட உள்ள மற்றுமொரு விமானத்தில் இச்சிறுமியின் பெயர் இருப்பது கடைசி நிமிடங்களில் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் பொலிசார் விமான நிலையம் செல்ல முன்னரே விமானம் கிளம்பிவிடும் நிலை காணப்பட்டது. இதனால் வேறு ஒரு யூனிட் பொல்சாரை அனுப்பி அந்த விமானத்தை மறிக்கச் சொல்கிறார்கள். ஓடு பாதையில் ஓடி விமானம் கிளம்ப ஆரம்பித்தவேளை, அதனை செலுத்திக்கொண்டு இருந்த விமானிக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அவர் விமானத்தை ஓடு பாதையில் நிறுத்திவிட்டார். அங்கே விரைந்து சென்ற பொலிசார் அச்சிறுமியை மீட்டுள்ளார்கள். தமது நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவர்கள் கருதினார்கள். ஆனால் அதிலும் ஒரு சிறிய சறுக்கல் இருந்துள்ளது !
அது என்ன தெரியுமா ?
அதே விமானத்தில் குறித்த இச் சிறுமியோடு மேலும் ஒரு பெண் துருக்கி சென்றுள்ளார். அவர் தீவிரவாதியை காதலித்து அங்கே செல்லவில்லை. மாறாக அந்த இயக்கத்தில்(ISIS) இணையவே சென்றுள்ளார் என்று அச்சிறுமி பின்னர் தான் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். பொலிசார் துருக்கி விமான நிலையத்தை தொடர்புகொண்டுள்ளார்கள். ஆனால் எந்த ஒரு நல்ல செய்தியும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்தச் சிறுமி தனியாகவா இவ்வளவு தூரம் செல்கிறார் ? என்ற கோணத்தில் ஒருவேளை சிந்தித்து இருந்தால் மற்றப் பெண்ணையும் பிடித்திருக்கலாம்....
http://www.athirvu.com/newsdetail/1684.html

மின்னல் ரங்காவுக்கு கன்னம் மின்னியது : கன்னத்தில் முத்தமிட்டது யார் ?

[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 17090 ]
சக்தி TVல் "மின்னல்" என்னும் நிகழ்சியை நடத்திவரும் நபர் ரங்கா. இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் நமால் ராஜபக்ஷவின் நெருங்கிய சகா. பின்னர் அவர் தனது அப்பாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த அப்படியே அரசியலில் குதித்து MP ஆனார் ரங்கா. சமீபத்தில் ரங்கா மின்னல் நிகழ்சியில் பல நக்கல் அடித்துப் பேசியுள்ளார். இவர் கிண்டல் செய்தது வேறுயாரையும் அல்ல, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் ரியாட் பதியூதீனை தான். இதனால் கடுப்பில் இருந்துள்ளார் பதியூதீன்.
3 நாட்களுக்கு முன்னர்(15) மகிந்தரின் அலரி மாளிகையில், ஒரு விருந்து உபசாரம் இடம்பெற்றுள்ளது. உள்ளே முக்கிய அமைச்சர்கள் மந்திர ஆலோசனையில் இருக்க அல்லக் கை, நொல்லக் கைகளுக்கு வெளியே பார்டி ஒன்று நடந்துள்ளது. முன் வராண்டாவில் நடந்த இந்த பார்டியில் சுடு பாணம் கூட பரிமாறப்பட்டுள்ளது. இதனால் சிலர் நல்ல மப்பில் இருந்துள்ளார்கள். இதேவேளை அங்கே ஏற்கனவே பதியூதீன் இருக்கிறார் என்று தெரிந்தும் ரங்கா சென்று தனது நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு இருந்துள்ளார். தான் மீடியாவில் இருப்பதாகவும் தான் நினைத்தால் எதனையும் செய்ய முடியும் என்றும் இவர் பேசிக்கொண்டு இருந்தவேளை அங்கே வந்த பதீயூதீன் சற்றும் எதிர்பாராத வகையில் ரங்காவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
அதுவரை நேரமும் தனது புஜபலம் பற்றிப்பேசிக்கொண்டு இருந்த மின்ன ரங்கா, மின்னலாக ஓடி மறைந்தார் என்று கூறப்படுகிறது. அட ஏன் அடித்தீர்கள் ? எதற்காக அடித்தீர்கள் என்று கூட ஒரு கேள்வியைக் கூட அவர் கேட்க்கவில்லையாம். அட இது எல்லாம் அரசியலில் சாதாரணமப்பா... இச்செய்தியை ஆங்கில இணையம் எப்படி எழுதியுள்ளது என்று பார்த்தீர்களா ?
minority political party in the UPFA alliance and an opposition MP representing the up-country with links to the government were those involved in the brawl. The minister concerned had accused the MP of being a hypocrite and without any warning had assaulted the MP taking him by surprise.
Sources revealed that the MP had made some remarks about the minister during a programme telecast over a TV private channel and this had led to a heated argument resulting in the fisticuffs.The onlookers managed to separate the two. Neither of them had complained to the police on this matter. A minister representing a minority political party in the UPFA alliance and an opposition MP representing the up-country with links to the government were those involved in the brawl.
The minister concerned had accused the MP of being a hypocrite and without any warning had assaulted the MP taking him by surprise.Sources revealed that the MP had made some remarks about the minister during a programme telecast over a private TV channel and this had led to a heated argument resulting in the fisticuffs. The onlookers managed to separate the two. Neither of them had complained to the police on this matter.
http://www.athirvu.com/newsdetail/1678.html

நீ என்னை அழிக்கவா பார்க்கிறாய் ? கெட்ட வார்த்தையால் திட்டிய மகிந்த !

[ Dec 18, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 15930 ]
கடந்த 2009ம் ஆண்டு மகிந்த அடுத்த முறையாக தேர்தலை அறிவித்தவேளை, யுத்தவெற்றியைக் காரணம் காட்டியே பெரும்பாண்மையாக வெல்ல முடியும் என்று பசில் ராஜபக்ஷ அறிந்துகொண்டார். அன்றைய தினம் தொடக்கம் அவர், மகிந்த விமானத்தில் வந்து இறங்கி கொழும்பு கட்டநாயக்காவில் மண்ணை முத்தமிட்ட காட்சி அடங்கிய கட்-அவுட்டையே தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கமையை மகிந்த வெற்றியும் பெற்றார். ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது. இபோது உள்ள இக்கட்டான சூழ் நிலையில் கூட, நிலமையை சரிவர புரியாத பசில் ராஜபக்ஷ பல இடங்களில் இந்த அதே கட்-அவுட் படத்தை வைக்கச் சொல்லியுள்ளார்.
மகிந்தரை சமீபத்தில் சந்தித்த அவரது தமிழ் நண்பர் ஒருவர், இந்த யுத்தவெற்றிக் காட்சி கட்-அவுட்டை நீங்கள் எல்லா இடங்களிலும் வைத்தால் தமிழர்கள் எவ்வாறு உங்களுக்கு வாக்குபோடுவார்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் யாழ்தேவியில் சென்ற கட் -அவுட் படத்தை போட்டால் தானே தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பெரும் பரபரப்பான மகிந்த ராஜபக்ஷ உடனே தொலைபேசியை எடுத்து, பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு "நீ என்னை அழிக்கப் பார்கிறாயா" என்று கத்தியுள்ளார். உடனடியாக யாழ்தேவியில் செல்லும் படங்களை வட -கிழக்கு மாகாணங்களில் வைக்குமாறு கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள பசில் மறுத்தவேளை, மகிந்த கெட்டவார்த்தையால் பசிலை திட்டித் தீர்த்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவுக்குச் சென்று அங்கே சில பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு தற்போது கொழும்பு திரும்பியுள்ள இந்த புண்ணியவான் தான் மகிந்தரை சந்தித்து இவ்வாறு அறிவுரை கூறியுள்ளான். இப்ப உங்களுக்கு புரியும் நான் யாரைப் பற்றி பேசுகிறோம் என்று !
http://www.athirvu.com/newsdetail/1677.html


No comments:

Post a Comment