Monday, December 29, 2014

9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்!

சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எயார் ஏசியா என்ற மலேசிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் காணமற் போனது தொடர்பான ஆய்வொன்றை லங்காசிறி எப்.எம்.கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மாவுடன் நடத்தியது.
அதன் போது, மலேசியன் எயர்லைன்ஸின் இரண்டு போயிங் 777 விமான இழப்புக்களைப் போல இந்த விமான விபத்தும் மலேசியாவுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. இந்த வருடமே 21ம் நூற்றாண்டில் விமான விபத்துக்களில் அதிகம் பேர் கொல்லப்பட்ட ஆண்டு.
சீரற்ற காலநிலை அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது. இடிமின்னலுடன் கூடிய மழைக்கான கால நிலை அது. தனது சாதாரணப் பறப்பு உயரான 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து மேலும் 6000 அடி தூரம் மேலே உயர்ந்து பறக்க விமானி அனுமதியைக் கோரியிருக்கிறார்.
இந்தோனேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பறப்புத் தூரம் 5,700 கிலோ மீற்றர்கள் இந்தத் தூரத்தையடைவதற்குத் தேவையானதை விட மேலதிகமாக மூன்று மணித்தியாலங்கள் பறப்பதற்கான எரிபொருளையும் அது கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் இருந்து ஆபத்தை உணர்த்தும் மே டே என்கிற அபாய அழைப்போ அல்லது பான் பான் என்ற அழைப்போ பயணப் பாதையை மாற்றி உடனே வேறோர் விமான நிலையத்தில் தரையிறக்கும் அழைப்போ கிடைக்கப் பெறவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.




http://www.tamilwin.com/show-RUmszCRdKafvz.html

No comments:

Post a Comment