Wednesday, December 17, 2014

6ம் வகுப்பு மாணவி உருக்குலைத்து பாலியல் பலாத்காரம்: சகமாணவனின் வெறிச்செயல்!

வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதூர் தாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகள் கீர்த்திகா (12). நேற்று பள்ளி சென்று வீடு திரும்பாத காரணத்தால், இவரை இவரது பெற்றோர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவி கே.விகுப்பம், கல்லாபெரியாங்குப்பம் மாந்தோப்பில் பிணமாக கிடந்தார். கை கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தார். மேலும் உடலில் கத்திக்குத்துக்கள் இருந்தன.
தகவல் அறிந்த பொலிசார் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாணவி கீர்த்திகா மதியம் சாப்பாட்டிற்காக வீடு சென்று திரும்பியபோது சைக்கிளில் வந்த இவரை சிலர் வழிமறித்து, டூ வீலரில் ஏற்றி சென்றுள்ளனர்.
பின்னர், மறைவிடத்தில் வைத்து அந்த மாணவியை கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என்று பொலிசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு:
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், கீர்த்திகாவின் ஊரில் இருந்து வரும் 10ம் வகுப்பு படித்து வரும் சரண்ராஜ் என்ற மாணவன் பள்ளிக்கு வராதது தெரியவந்தது.
அவனிடம் விசாரிக்க பொலிசார் வீட்டுக்கு சென்ற போது, மாணவனின் பெற்றோர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.
பொலிசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், மாணவன் சரண்ராஜ் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
ஓசூர் விரைந்து சென்ற பொலிசார் அவனிடம் நடத்திய விசாரணையில், கீர்த்திகாவை அடைய வேண்டும் என்று சரண்ராஜ் பல நாட்களாக திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அதனை வெளிகாட்டாமல் நல்லவர் போல் கீர்த்திகாவிடம் நட்புடன் பழகியுள்ளான்.
கள்ளம் கபடம் அறியாத பிஞ்சு குழந்தையான கீர்த்திகா சரண்ராஜிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிந்ததும் கீர்த்திகா தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அவரை எதிர்பார்த்து காத்திருந்த சரண்ராஜ் நானும் வீட்டுக்கு தான் போகிறேன் சேர்ந்து போகலாம் வா எனக் கூறியுள்ளான்.
அதற்கு சம்மதம் தெரிவித்த கீர்த்திகா அவரது சைக்கிளை எடுத்து கொண்டு சரண்ராஜூடன் புறப்பட்டார். பள்ளியை விட்டு வெளியே வந்ததும் சரண்ராஜ் கொய்யாபழம் வாங்கி கொடுத்துள்ளான். பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சம்பவம் நடந்த மாந்தோப்பு அருகே வந்ததும் சரண்ராஜ் தனது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளான். மாந்தோப்பில் சிறிது நேரம் விளையாடி விட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளான்.
அதற்கு சம்மதம் தெரிவித்த கீர்த்திகாவும் உடன் சென்றார், தோப்பின் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.
அப்போது கை, கால்களை கட்டி விளையாடலாம் என சரண்ராஜ் கூற எதுவும் அறியாத கீர்த்திகா தனது ரிப்பனை கழட்டி கொடுத்துள்ளார். அதனை வைத்து கீர்த்திகாவின் கை, கால்களை கட்டியுள்ளான்.
கட்டி முடித்ததும் சரண்ராஜ் தனது ஆசையை அவரிடம் தெரிவித்துள்ளான், அதற்கு மறுத்த கீர்த்திகா அழுது சத்தம் போட்டார்.
அடுத்த நொடியே மாணவியை கீழே தள்ளி மிருகம் போல செயல்பட ஆரம்பித்துள்ளான். துப்பட்டாவால் மாணவியின் வாயை கட்டியுள்ளான், பின்னர் ஆடைகளை கலைத்துள்ளான்.
பல்வேறு முயற்சி செய்தும் அவனால் மாணவியை கற்பழிக்க முடியவில்லை. இதனால் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து அவளது தலையில் அடித்துள்ளான், அவள் மயங்கி சுய நினைவை இழந்தாள்.
பின்னர் மார்பில் குத்தி கிழித்துள்ளான், கீர்த்திகா இறந்ததும் உடலை இழுத்து முள்புதர் அருகே போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்றுள்ளான்.
அவனது ஆடைகளில் ரத்தக்கறை படிந்ததை கண்ட அவனது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தனத மகன் ஏதோ விபரீதம் செய்துள்ளான் என்பதை அறிந்த அவர்கள் உடனே அவனை வெளியூர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தகவல்களை சேகரித்த பொலிசார் மாணவன் சரண்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment