Thursday, December 18, 2014

ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 230 பிணங்கள்! ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு) !

ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 230 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை, அங்குள்ள கண்காணிப்புக்குழு கண்டறிந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ஷியா பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவில் போர் சூழல் குறித்து கண்காணித்து வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சிரியாவின் கிழக்கே உள்ள அல்-காஷ்யாவில் (Alkashya) சுமார் 230-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் குவியலாக புதைக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இவற்றை அங்குள்ள பழங்குடியின மக்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், ஷியா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் மாயமாகி உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment