நேற்று முன் தினம் பாக்கிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்குள், 9 தலபான் தீவிரவாதிகள் புகுந்து சுமார் 145 பேரை சுட்டும் எரித்தும் கொன்றார்கள். இச்செய்தி உலகையே அதிரவைத்துள்ளது. பாக்கிஸ்தான் 3 தினங்களை விடுமுறையாக அறிவித்து துக்கத்தை அனுஷ்டித்து வருகிறது. ஆனால் அல்லாவே ஒரு கடவுள் ! அவர் முன்னால் எல்லோரும் தூசி தான் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளோடு, இந்தக் கொலைகாரர்கள் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள். இவர்கள் 9 பேரையும் பாக்கிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொல்லும் என்பது அவர்களுக்கே தெரிந்த விடையம்.
இந்த தற்கொலை தாக்குதலை நடத்த முன்னர் இவர்கள் படங்களை எடுத்துள்ளார்கள். இவர்கள் புரிந்தது ஒரு வீர தீரச் செயல் என்பதுபோல தலபான் அமைப்பு இவர்கள் புகைப்படங்களை ஹீரோ ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளது என்றால் பாருங்களேன் !
http://www.athirvu.com/newsdetail/1683.html
No comments:
Post a Comment