ஆசியக் கண்டத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் கனேடியத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
டிசம்பர் 26ஆம் நாள் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமானமக்களைப் பலிகொண்ட இந்தஆழிப்பேரலை இருபது இலட்சத்துக்கும் அதிகனோரைஉடமைகள் இழந்துஏதிலியராக்கியது. 10ஆவது ஆண்டைநினைவு கூருமுகமாக கனடியத் தமிழர் பேரவை ஏனைய குமுக அமைப்புகளோடு இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
நூற்றுக்கணக்கானமக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் பரி தொகுதியின் கனடியப் பாராளுமன்றஉறுப்பினர் திரு பற்றிக் பிறவுண், சட்டவல்லுனர் திரு கரி ஆனந்தசங்கரி, மருத்துவர் திருமதி இராசேசு லோகன் மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு இராச் தவரட்ணசிங்கம் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
ஆழிப்பேரலையால் மறைந்தோருக்கு மக்கள் மலரஞ்சலி செலுத்தினர். கனடியத் தேசிய மற்றும் தமிழ் ஊடகங்கள் நிகழ்வினை பதிவு செய்ய பெருமளவில் பங்கேற்றனர்.canada-tamilar-peravaiTSU14-6988TSU14-7002
TSU14-7007
TSU14-7045
http://www.canadamirror.com/canada/36030.html