Tuesday, December 30, 2014

சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு! (01-01-2015) 16வது தடவையாக. புத்தாண்டும் புதுநிமிர்வும்:



பிறக்கவிருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு சுவிட்ஸர்லாந்தில் 16வது தடவையாக மாபெரும் கலைநிகழ்வான “புத்தாண்டும் புதுநிமிர்வும்” இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
லங்காசிறியின் பேராதரவில் சுவிஸ் வாழ் தமிழர்கள் நடாத்தும் இந்த நிகழ்வானது, நாளை மறுதினம் ( 1ம் திகதி) பிற்பகல் 3:00 மணியளவில் Stadthalle Dietikon என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்வில் ஐரோப்பா, சுவிஸ் வாழ் ஈழத்துக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெறவுள்ளது.
அதுமட்டுமின்றி, சூப்பர் சிங்கர் புகழ் இசைக் கலைஞர்களும், பின்னணிப் பாடகர் பிரசன்னாவும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு உறவுகளோடு சங்கமித்து மகிழ்ந்திட அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment