Sunday, November 30, 2014

கனடா-மார்க்கம் ஃபெயரில் நடைபெற்ற தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்!



கனடா, மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் கனடா வாழ் ஈழத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்போடு, தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.
ஒன்ராரியோ மாநிலத்தில், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட்டில், கனேடிய தமிழர் நினைவெழுச்சி அகவம், ஒழுங்கு செய்த மாவீரர் நாளின் நான்கு நிகழ்வுகளிலும் பெருந்திரளான மக்கள் வருகை தந்து, தமது தாயக உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
காலை 6.30 மணி. மதியம் 12.00மணி, மாலை 4.00 மணி. இரவு 7.00 மணி என்று ஒழுங்கு செய்ய பெற்றிருந்த நான்கு நிகழ்வுகளும் ஒன்றிணைந்த மக்களது வருகையினால் எழுச்சிபெற்று நடைபெற்றது.
எழுச்சி நடனங்கள், வானம் பாடிகளின் தாயக விடுதலைப் பாடல்கள். நாடகம், இளையோரின் நிகழ்ச்சிகள், உரை என்று மாவீரர்களின் நினைவோடு அரங்கம் பேரெழுச்சி பெற்றுத் திகழ்ந்தது.
நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதைச் சரியாகப் புலப்படுத்திய நாள் 27. 11. 2014.
மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடல் ஈழத் தமிழர்களின் தாகத்தைத் தெளிவு படுத்தியுள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். என்ற இலட்சிய உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlu1.html

No comments:

Post a Comment