பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் கீழ் கொடிகாமம் வைத்தியசாலைக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனால் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் நிழற்படபிரதி இயந்திரம் மற்றும உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொடிகாமம் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சாவகச்சேரி பிரதேசபை தலைவர் துரைராஜா சுகாதார திட்டமிடல் வைத்திய அதிகாரி தமிழரசு கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த திக்கம் தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன். கொடிகாமம் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை சமூகத்திடம் உபகரணங்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாகவச்சேரி பிரதேசபைதலைவர் துரைராஜா உரையாற்றிய போது,
இந்த பிரதேசத்தின் குறைபாடுகள் தேவைகளில் அக்கறை கொண்டு கொடிகாமம் வைத்தியாசாலைக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் வழங்கியிருக்கும் உதவிக்காக இந்த பிரதேசத்தின் சார்பில் முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்கள் பிரதிநிதிகளால் செய்யக்கூடிய காரியங்களுக்கு எண்ணற்ற தடைகளை இந்த அரசாங்கம் செய்கின்ற போதிலும் அதையும் மீறி எமது மக்களுக்கு உதவிகளை எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றார்கள்.
இன்றைக்கு வெளிநாட்டுக் கடன்களை வகைதொகையின்றி பெற்று எமது மக்களை பெரும் கடனாளிகளாக்கி பெரும் சுமைகளை மக்களிக் தலையில் சுமத்தி ஒரு மாயை அபிவிருத்தியை காட்டுகின்ற அரசாங்கத்தின் வேடமுகம் இப்போது கலையத் தொடங்கியிருக்கின்றது.
வடக்கில் ஒரு மாகாணசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள போது அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் அதை ஒரு ஒரு வெற்றுச்சபையாக ஆக்கி அதன் மீது மக்களின் அதிருப்தியை ஏற்படுத்த அரசாங்கமும் அரசோடு சேர்ந்து இருக்கின்ற வடக்கு கூட்டமும் முயன்று வருகின்ற போதும் அரசாங்கத்தின் பித்தலாட்டத்தை மக்கள் உணர்ந்து கொள்கின்ற நிலை தற்பொழுது தெளிவாக இருக்கின்றது.
வடக்கு மாகாணசபையை சுயாதீனமாக அதிகாரங்களுடன் நிர்வாகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தாதுவிடின் வடக்கை மிகச்சிறந்த மாகாணமாக ஆக்குவதற்கு எம்மால் முடியும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu0.html
No comments:
Post a Comment