Posted On 23 Nov, 2014
படகுகள் திருத்தும் இடம் ஒன்றில் வேலை செய்யும் நாவாந்துறையைச் சோ்ந்த 25 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரின் வீட்டில் குடும்பஸ்தரின் மனைவியின் சிறியதாய் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் இருந்து வந்து இரு நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார். இந் நிலையில் குறித்த குடும்பஸ்தா் சிறியதாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந் நிலையில் குடும்பஸ்தரின் கடைசிக் குழந்தைக்கு ஏற்பட்ட நோய் காரணமாக வைத்தியரிடம் காட்டச் சென்ற வேலையால் வந்த குடும்பஸ்தா் சிறியதாயுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பிள்ளையைக் காட்டிவிட்டு வீட்டிற்கு வந்த மனைவி இதனை நேரடியாகக் கண்டதாகத் தெரியவருகின்றது.
உடனடியாக குழந்தையைக் கீழே இறக்கி விட்டு அறையை மூடி மனைவி தூக்கில் தொங்க முயற்சித்துள்ளார். மனைவி கதவை மூடியதால் அதிர்ச்சியுற்ற கணவா் கத்திக் கொண்டு கதவை உடைக்க முயன்றதாகவும் அது முடியாது போனதால் அயலவா்களின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கதவை உடைத்து உள்ளே சென்ற போது மனைவி வீட்டுக் கூரையில் குழந்தையின் தொட்டில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியதாகவும் உடனடியாகச் செயற்பட்டதால் மனைவியை உயிருடன் காப்பாற்றியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
http://sudarnews.com/47960
No comments:
Post a Comment