Saturday, November 29, 2014

சாவகச்சேரி ஆலயத்தினுள் நஞ்சருந்திய இருவரில் ஒருவர் மரணம்!

சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயமொன்றினுள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
23 வயது யுவதியும், 45 வயது ஆண் ஒருவரும் நஞ்சருந்திய நிலையில் ஆலய வளாகத்தினுள் கிடப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  உடனடியாக குறித்த ஆலயத்துக்கு சென்ற பொலிஸார் இருவரையும் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இவர்களில் யுவதி சிகிச்சை பயனின்றி சாவகச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றையவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரெத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியெ உயிரிழந்துள்ளார்.
கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 ) என்பவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv1.html

No comments:

Post a Comment