Friday, November 28, 2014

மேடையிலேயே மரணமடைந்த நடிகர்

கேரளாவில் மேடையிலேயே நாடக நடிகர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் கேரளா கலா அகாடமி ஆப் ஆர்ட்டிஸ் சார்பில் காயம்குளத்தில் உள்ள கே.பி.ஏ.சி. ஆடிட்டோரியத்தில், ‘பகவத சப்தஹம்' நாட்டிய நாடகத்தின் ஆறாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதில், ஆர்.சி.பிள்ளை என்கிற ராமச்சந்திரன் பிள்ளை (45) என்பவர் கோவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதில் கோவிந்தன் கதாபாத்திரம் மரணமடைவது போன்ற காட்சி வந்தபோதும் நடித்துக் கொண்டிருந்த போது, திடீரென நிஜமாகவே ராமச்சந்திரன் பிள்ளை மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அவரை அவரது நாடகக் குழுவினர் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment