Friday, November 21, 2014

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கட்சி தாவினார்

ஆளுங்கட்சியின் முக்கிய சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் கட்சி தாவியுள்ளார்.
இது தொடர்பான தகவல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அலுவலக வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
பெருமாள் இராஜதுரை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்று காத்திருந்த நிலையில் அவர் தற்போது ஆளுங்கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று நள்ளிரவுக்குள் இன்னும் பலர் ஆளுங்கட்சியை விட்டு விலகும் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhv5.html

No comments:

Post a Comment