Friday, November 21, 2014

பாக்ஸரின் மனைவியோடு சில்மிஷம்: பாத்ரூமில் இருந்து வந்த பாக்ஸர் சொல்லியும் கேட்க்கவில்லை !

ரஷ்யாவில் இருந்து சமீபத்தில் வெளியான CCTV வீடியோ ஒன்று அனைவரையும் அதிரவைத்ததோடு, கூடவே சிரிப்பையும் தான் தந்துள்ளது. காரணம் என்னவென்றால், ரஷ்யாவில் பல குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர் நிக்கோலா வால்சன்கோ ஆவார். 29 வயதாகும் அவர் குத்துச்சண்டை மற்றும் அல்ல கராத்தேயிலும் சிறந்த பயிற்றுவிப்பாளராக உள்ளார். அவர் தனது மனைவியைக் கூட்டிக்கொண்டு பார் ஒன்றுக்குச் சென்று மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் எழுந்து கழிவறை சென்றுவிட்டு திரும்பி வந்தால் 10 பேர் கொண்ட குழு ஒன்று அவரது மனைவியை சுற்றி உட்கார்ந்து அவரை கிண்டலடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள். இவர்கள் எவருக்கும் நிக்கோலா வால்சன்கோ யார் என்று தெரியவே தெரியாது. தனது மனைவியை தொல்லை படுத்தாது எழுந்து போங்கள் என்று நிக்கோலா வால்சன்கோ சாதுவாகச் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் கேட்டபாடாக இல்லை.

இதில் ஒருவர் எழுந்து வெளியே வந்தால் பிரச்சனையை பேசி தீர்க்கலாம் என்று ஜாடை மாடையாக நக்கல் அடித்துள்ளார். அதாவது துணிவிருந்தால் வெளியே வா சண்டை போடலாம் என்பது தான் அதன்பொருள். ஓகே வெளியே சென்று பேசலாம் வாருங்கள் என்று நிக்கோலா வால்சன்கோ கூறியுள்ளார். உடனே அந்த 10 பேரும் எழுந்து வெளியே சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் தனது சேட்டை களற்றிவிட்டு , கட்டான தனது உடல் பருமனைக் காட்டிவிட்டு, குத்துச் சண்டை வீரரான நிக்கோலா வால்சன்கோவையே குத்த முற்பட்டுள்ளார். அங்கே என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் இனி நினைக்கவே தேவையில்லை. நிக்கோலா வால்சன்கோ குத்திய முதல் குத்திலேயே அவர் நிலத்தில் விழுந்தார். மற்றைய நபரையும் நிலத்தில் விழுத்திவிட்டார் நிக்கோலா வால்சன்கோ.
அங்கே நின்ற முகுதி 8 பேரும் வேடிக்கை தான் பார்க முடிந்தது. மூன்றாவதாக ஒரு நபர் வந்து ஏதோ கேள்வி கேட்டபோதும் அவருக்கும் முகத்தில் அடிதான். எண்ணிக்கை பெரிதல்ல , மனதில் துணிச்சல் தான் முக்கியம். மற்றும் கற்ற கலை எப்பொழுதும் கைகொடுக்கும் என்பது இதுதான்.

No comments:

Post a Comment