Sunday, November 23, 2014

ரகசியமாக சல்மான் கானின் தங்கை வரவேற்பில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்சே


பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை திருமண வரவேற்பில், இலங்கை அதிபர் ராஜேபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கலந்துகொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த 18ம் திகதி ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
சல்மான் தனது தங்கைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார், மும்பையில் தன் வீட்டுக்கு அருகில் ரூ.16 கோடி மதிப்புள்ள ஃபிளாட் ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தார்.
இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.
இதில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமலும் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அர்பிதா கானுக்கு வாழ்த்துக்கள். திருமண வரவேற்புக்கு முன்பு சல்மான் கானை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment