[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:05.34 AM GMT ]
இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும், இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றுமே குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது சுமார் மூன்று அடி ஆழமுள்ள குழிக்குள் இன்று காலை எட்டு மணியளவில் விழுந்துள்ளனர்.
குழியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது குறித்த மேலதிக தகவல்களை சேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnr7.html
யாழில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ஏ.கே47
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:06.21 AM GMT ]
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், ஏ.கே 47 ரக துப்பாக்கியொன்று சிக்கியுள்ளது.
வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வராசா என்ற மீனவரின் வலையிலே இந்த துப்பாக்கி சிக்கியுள்ளது.
இது தொடர்பில், பருத்தித்துறை பொலிஸில் தகவல் வழங்கிய மேற்படி மீனவர், வலையில் சிக்கிய துப்பாக்கியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில், பருத்தித்துறை பொலிஸில் தகவல் வழங்கிய மேற்படி மீனவர், வலையில் சிக்கிய துப்பாக்கியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnsy.html
No comments:
Post a Comment