ஹற்றன், டிக்கோயா பகுதியில் இன்று காலை 11 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக 18 வீடுகளின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக 18 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் இடம்பெயர்ந்து குறித்த தோட்டத்தின் வாசிகசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw6.html
No comments:
Post a Comment