Monday, October 27, 2014

ஆண் பெண் உறுப்புடன் பிறந்த அதிசய குழந்தை

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண் பெண் உறுப்புடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் விஜயலட்சுமி. இவருக்கும் சித்தேரிப்பட்டு பகுதியைச்சேர்ந்த திருவேங்கடம் மகன் சரவணன் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதில் விஜயலட்சுமி கருவுற்று இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் அவரை 108 அவசரஊர்தி மூலம் டி.எடையார் கிராமத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் காலை 7 மணிக்கு சேர்த்தனர்.
7.45மணிக்கு விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் உறுப்பு இரண்டுமே இருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
குழந்தை 2 கிலோ 750 கிராம் எடை இருந்தது. தாய், சேய் இருவரும் நலமுடன் உள்ளனர். பிறவி குறைபாடு காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை.
தீவிர பரிசோதனை செய்த பின்னரே இக்குறைபாட்டை சரிசெய்ய முடியுமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று மருத்துவர் இளையராஜா கூறியுள்ளார். மேலும் சிறப்பு மருத்துவகுழுவினர் அக்குழந்தையை தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment