Tuesday, October 28, 2014

கண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வடிக்கும் சிறுமி (வீடியோ இணைப்பு)

லக்னோவை சேர்ந்த சிறுமி ஒருவர் ரத்த கண்ணீர் வடிக்கும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வட இந்தியாவின் லக்னோவை சேர்ந்த டுவிங்கிள் (13) என்ற சிறுமியின் கண்களில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக ரத்தம் வடிகிறது.
இவரது கண்களில் மட்டுமல்லாமல், தலை, கைகள் மற்றும் கால்களில் இருந்தும் ரத்தம் வடிகிறது.
ஆனால், அப்பகுதியை சேர்ந்த் மக்கள் மாந்தீரிகம், ஆவி பிடித்தது போன்றவற்றால் இப்படி ஏற்பட்டுள்ளது என்ற மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து ரத்தநோய் மருத்துவர் ஜார்ஜ் பச்சன் கூறுகையில், இது இரத்த தட்டுகளில் ஏற்பட்டுள்ள அடைப்பால் இவ்வாறு ஏற்படலாம் என்றும் அல்லது இது ஒரு வித புற்றுநோய் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment