Monday, October 27, 2014

கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டம்: ஜோடிகளுடன் இணையலாம்

கேரளாவில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 23ம் திகதி கோழிக்கோட்டில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றில் கலாச்சாரத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறி தாக்குதலில் ஈடுபட்ட பாரதீய ஜனதாவின் கிளை அமைப்புகளில் ஒன்றான 'யுவ மோர்ச்சா' அமைப்பைக் கண்டித்து, நவம்பர் 2ம் திகதியன்று இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இரண்டொரு நாளில் இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. அதில் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஜோடிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment