Monday, October 27, 2014

மாணவியைக் கடத்தி துஸ்பிரயோகம்

புத்தளம் அருகே 17 வயது மாணவியொருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
புத்தளம் மெல்லன்குளம் பகுதியில் வசிக்கும் மாணவியொருவரே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
25ஆம் திகதி மாலை தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு மாணவி வீடுதிரும்பிக் கொண்டிருக்கையில் இடைவழியில் காத்திருந்த நபர் ஒருவர் மாணவியை பலாத்காரமாக கடத்திச் சென்று அருகில் இருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்குள் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
தற்போது மாணவி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சந்தேக நபரைப் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment