Tuesday, October 28, 2014

கனடா உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட தமிழர்களின் வெற்றிப் பெறுபேறுகள்!

கனடாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 30 தமிழர்களில் பலரும் கணிசமான தொகை வாக்குக்களைப் பெற்றிருந்தனர் என்ற போதிலும், மூவர் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மார்க்கம் நகராட்சியின் ஏழாம் வட்டார உறுப்பினராக இருக்கும் திரு. லோகன் கணபதி அவர்கள் மீளவும் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல மார்க்கம் நகர 7ம் மற்றும் 8ம் வட்டாரக் கல்விச் சபைகளிற்கான பிரதிநிதியாக வொனிற்றா நாதன் அவர்களும், ரொறன்றோவில் 18ம் வட்டாரத்திற்கான கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட பார்த்தி கந்தவேல் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தல் பற்றிய விழிப்புப் பிரச்சாரம் மற்றும் தகவல்களைப் பரிமாறுவதில் லங்காசிறி இணையத்தளம் முக்கிய பங்காற்றியமையானது, குறித்த தமிழ் வேட்பாளர்களின் முனைப்பான பிரச்சாரத்திற்கும் வித்திட்டிருந்தது என லங்காசிறி வானொலி நடாத்திய இந்தத் தேர்தல் பற்றிய விசேட ஆய்வு நிகழ்ச்சியின் போது கனடாவிலுள்ள ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlwy.html

No comments:

Post a Comment