Tuesday, October 28, 2014

ஜெயலலிதாவை வீழ்த்த கபடநாடகமாடும் பன்னீர் செல்வம்?

முதல்வர் பதவியை நிலைநிறுத்த மழை நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவ வேண்டும் என பன்னீர் செல்வத்துக்கு திமுக தலைவர் கருணாநதி யோசனை கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா ஜாமீனில் வெளிவருவதற்காக தமிழக மக்கள் ஏராளமான போராட்டங்களிலும், நேர்த்தி கடன் செலுத்துவதிலும் மும்பரமாக இருந்தனர்.
மேலும் அவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என பலர் கூக்குரலிட்டு மக்களின் முதல்வர் என்ற பட்டத்தையும் ஜெயலலிதாவுக்கு கொடுத்தனர்.
ஆனால் முதல்வர் பதவியிலிருந்த பன்னீர் செல்வத்தை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. மேலும் அவர் பதவியிருந்தாலும் கூட அவருக்கு தக்க மரியாதையை அரசியல் புள்ளிகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஒரே வழி மக்களுக்கு பாடுபடுவது போல் இருப்பது தான் என பன்னீர் செல்வதக்கு, திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே தமிழகத்தில் மழையினால் சேதமடைந்த பகுதிகளை தீவிரமாக பன்னீர் செல்வம் கண்காணித்து வருவதுடன், நிவாரண நிதியையும் மக்களுக்கு அளித்து வருகிறார்.

No comments:

Post a Comment