யாழில் நடைபெற்ற இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னால் வீரர்கள் அணிக்கும் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கிடையிலான போட்டியில் துடுப்பாட்ட போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னால் வீரர்கள் அணி 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
வடமாகணத்தில் முதலாவதாக யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட புற்தரை துடுப்பாட்ட மைதானத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இலங்கை துடுப்பாட்ட நிறுவனத்தின் நிதியுதவியுடனும் இராணுவத்தினரின் பங்களிப்புடனும் குறித்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
மைதானம் கையளிக்கும் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரெரா யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் முன்னால் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர்களான சனத்ஜெயசூரியா முத்தையா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைதான கையளிப்பு நிகழ்வுக்கு பின்னர் இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னால் வீரர்கள் அணிக்கும் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கும் இடையில் சிநேகபூர்வ போட்டி நடைபெற்றது.
குறித்த போட்டி 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும் மழை காரணமாக 12 பந்து பரிமாற்றங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணி 12 பந்து பரிமாற்ற முடிவில் 92 ஓட்டங்களை பெற்று ஆறு இலக்குகளை இழந்தது.
பதிலுக்கு துடுபெடுத்தாடிய இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்கள் அணி 11.2 பந்து பரிமாற்றத்தில் 95 ஓட்டங்களை பெற்று 5 இலக்குகளால் வெற்றியீட்டியது.
சனத் ஜெயசூரியா அதிரடியாக ஆடி நான்கு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னால் வீரர்கள் அணியில் சனத்ஜெயசூரியா முத்தையா முரளிதரன் உப்புல் சந்தன உள்ளிட்ட தேசிய வீரர்கள் இடம்பெற்று இருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq3.html
No comments:
Post a Comment