Friday, October 31, 2014

நாங்கள் ஜிகாதியாவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் சேர முயன்ற நபர்கள் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்ற இரண்டு பிரான்ஸ் நபர்களை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்சை சேர்ந்த நபர் ஒருவரும், மொராக்கோ நாட்டில் வளர்ந்த பிரான்ஸ் வம்சாவளி நபர் ஒருவரும், பிரான்சில் உள்ள தேசிய வங்கிகளை கொள்ளையடித்து பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைய முயன்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டில் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்ட அல்ஜீரியாவை சேர்ந்த மொஹமெத் மெரா(Mohamed Merah) என்ற தீவிரவாதியால் மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் காணொளி மற்றும் புகைப்படங்களை வைத்து பிரசாரம் செய்து கொண்டிருந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே விரைந்து செயல்பட்ட பிரான்ஸ் பொலிசார், கடந்த 27ம் திகதி பெஸ்(Fez)  நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment