தமது கணவனுடன் உல்லாசமாக இருந்தமையால் தமது நான்கு வயது மகனை சரியாக பராமரிக்க முடியாமல் போனதென தாயொருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அடிலெயிட்டில், தாய் ஒருவரினால் பாதுகாக்க தவறிய மகன் சில தினங்களுக்கு முன்னர் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சிறுவனை பொலிசார் மீட்கும் போது, அவனது உடல் எடை 8.3 கிலோ வரை குறைந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் தாமதித்திருந்தால் சிறுவன் இறந்திருப்பான் என அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட தாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் சாட்சியம் அளிக்கையில், ‘நான் சகலதையும் குழப்பிக் கொண்டேன். நான் தவறு இழைத்தேன். எனது மகனுக்கு அல்லாமல் எனது கணவனுக்கு முன்னுரிமை அளித்திருக்கக்கூடாது என தெரிவித்தார்.
இந்த சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கிறது.
இதில் அழுகிய உணவுகளும், குப்பைக் கூளங்களும் நிறைந்து நாற்றம் அடித்ததாக ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சிறுவனை கடந்த மூன்று மாதங்களாக குளிக்க வைத்திருக்கவில்லை எனவும் தாய் கூறியிருந்தார்.
தம்முடன் வாழும் நபர் தம்மை தாக்குகிறார் என்று முறையிடுவதற்காக குறித்த பெண் பொலிசாரை அழைத்த சமயத்தில் தான், சிறுவனின் நிலை தெரியவந்துள்ளது.
|
No comments:
Post a Comment