Friday, October 24, 2014

பழம்பெரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் (வயது 86) மரணம்!


பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப்பட்ட பழம்பெரும் எஸ்.எஸ். ராஜேந்திரன் (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்
பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1962ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து 1981ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார் — அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 05:54.37 AM GMT +05:30 ]
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் 1950, 60களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.
பார் மகளே பார், குங்குமம், பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம் சாரதா போன்ற திரைப்படங்களில் இவருடன் இணைந்து நடித்த விஜயகுமாரியைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில் விஜயகுமாரியை மறுமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு அவர் மூலமாக ஆண் குழந்தையொன்று பிறந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார்.
பின்னர் இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்தார்கள்.
1962ல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் சார்பில் 1970 ஏப்ரல் 03 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 02 நாள் வரை பணியாற்றினார். 1980இல் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் 86 வயதான இவர், உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

No comments:

Post a Comment